pATal61 pATal60.html pATal61.html pATal62.html ஏரெழுபது மகாகவி கம்பர் 61. நெற்பொலிச் சிறப்பு.
பொருளடக்கம் | 60. போர்ப்படுத்தற் சிறப்பு. | 62. நெற்குவிததற் சிறப்பு. | அகெடமி

61. நெற்பொலிச் சிறப்பு. விற்பொலியும் பெருங்கீர்த்தி வேளாளர் விளைவயலில் நெற்பொலியுண் டாமாகில் நிலமகளும் பொலிவுண்டாம் பொற்பொலிவுண் டாமுலகம் புகப்பொலிவுண் டாம்புலவோர் சொற்பொலிவுண் டாங்கலியின் துயர்பொலிய மாட்டாதே. (இ—ள்.) வில் பொலியும் — ஒளியோடு விளங்குகின்ற, பெருங் கீர்த்தி — மிக்கசீர்த்தியையுடைய, வேளாளர் — வேளாளரின், விளை வயலில் — (நெற்பயிர்) விளைகின்ற வயலிலே, நெல் பொலி — நெல்லின் குப்பை, உண்டாம்ஆகில் — உளதாகுமானால், நிலம் மகளும் — பூமி - தேவிக்கும், பொலிவு — விளக்கமானது, உண்டாம்—; பொன் பொலிவு — பொன்னின்விளக்கமும், உண்டாம்—; உலகம் — உலகத்தில், புக — உணவின், பொலிவு—, உண்டாம்—; புலவோர் — வித்துவான்களின், சொல் —சொல்லுக்கும்[கவிக்கும்], பொலிவு—, உண்டாம்—; கலியின் — வறுமையின், துயர் — தொந்தரவு, பொலிய மாட்டாது — தோன்றாது; (எ - று.) வயலில் பொலிநெல் உண்டாமாயின், உண்டாமாயின், நிலமகட்பொலிவு முதலிய பொலிவுண்டாக, வறுமைக்குமாத்திரம் பொலிவு உண்டாகா தென்க: பொலி நெல் உண்டாகக் கலிதொலையு மென்றவாறு. பொலி — தூற்றாத நெற்றிரள். உணவு என்னும் பொரு ளுள்ள புகா என்னுஞ்சொல் குறியதன்கீழ் ஆக்குறுகி, “புக” என வந்ததென்க. புக என்பதற்கு — எங்கும் எனினுமாம். “புகழ்ப் பொலிவு” எனவும் பாடம். — (61)
பொருளடக்கம் | 60. போர்ப்படுத்தற் சிறப்பு. | 62. நெற்குவிததற் சிறப்பு. | அகெடமி