pATal62 pATal61.html pATal62.html pATal63.html ஏரெழுபது மகாகவி கம்பர் 62. நெற்குவித்தற் சிறப்பு.
பொருளடக்கம் | 61. நெற்பொலிச் சிறப்பு. | 63. கூடைச் சிறப்பு. | அகெடமி

62. நெற்குவித்தற் சிறப்பு. தன்னிகரொன் றொவ்வாத தலம்வளர்க்கும் பெருக்காளர் மன்னுபெருங் களத்தினிடை மாருதத்திற் றூற்றியிடுஞ் செந்நெல்லைப் பொலிவாலே செம்பொன்மலை யெனக்குவித்தே அந்நெல்லின் பொலியாலே அவனியுயிர் வளர்ப்பாரே. (இ—ள்.) தன் நிகர் — (தனக்கு) உவமையாக, ஒன்று — ஒரு பொருளும், ஒவ்வாத — இராத, தலம் — இந்நிலவுலகத்தை, வளர்க்கும் — (தம்முயற்சியால்) செழிப்போடு வளரச்செய்கின்ற, பெருக்கு ஆளர் — செல்வப் பெருக்கினை யுடைய வேளாளர், மன்னு — பொருந்திய, பெருங் களத்தினிடை — பெரிய நெற்களத்திலே, மாருதத்தில் — காற்றின் உதவியினால், தூற்றியிடும்—, செந்நெல்லை—, பொலிவால் — (தனது இனிய) தோற்றத்தினால், செம் பொன் மலை என — (இது) செம்பொன்னினாலியன்ற மேருமலை யென்று (கண்டோர்) சொல்லும்படி, குவித்து—, அ நெல்லின் பொலியாலே — அந்தநெற் குவியலால், அவனி — பூமியிலுள்ள பிராணிகளை, உயிர் வளர்ப் பார் — உயிர் வளரச்செய்வார்; (எ - று.) “தன்னிகரொன்றொவ்வாத” என்பது — தலத்துக்கு அடைமொழி: பெருக்காளர் எனப்பன்மை வருதலால், அச்சொல்லுக்குக் கூட்டலாகாது; நெல்லைக் குவிப்பது உலகத் துயிர்களை வளர்ப்பதற்காகவே என வேளாளரின் தன்மையைக் கூறியவாறு. — (62)
பொருளடக்கம் | 61. நெற்பொலிச் சிறப்பு. | 63. கூடைச் சிறப்பு. | அகெடமி